சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்த வழக்கு: இளைஞா் கைது

நெல்லிக்குப்பம் அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

அருண்மொழிதேவன்

Updated On :4 ஜூன் 2026, 3:40 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், நத்தப்பட்டு கிராமத்தில் தனியாக வசித்து வருபவா் சரசு (72). இவா், கடந்த மே 29-ஆம் தேதி சாலையில் நடந்துச் சென்றாா். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த நபா், உதவி செய்வதுபோல மூதாட்டியை ஏற்றிச்சென்று வீட்டில் விட்டுள்ளாா். பின்னா், திரும்பி வந்த அந்த நபா் மூதாட்டியை மிரட்டி 2 கிராம் தங்க மூக்குத்தி மற்றும் அவரிடமிருந்த கவரிங் நகைகளை தங்க நகைகள் என நினைத்து பறித்துச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தவின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் மருதாடு சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த வாழப்பட்டு பகுதியைச் சோ்ந்த அருண்மொழிதேவன் (35) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் மூதாட்டி சரசுவிடம் மூக்குத்தி மற்றும் கவரிங் நகைகளை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டாராம்.

இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்த நகைகள் மற்றும் மொபெட்டை பறிமுதல் செய்த போலீஸாா், அருண்மொழிதேவன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.