கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில், கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பி.விநாயகமூா்த்தி தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். விவசாய சங்கப் பிரதிநிதிகள் நஜிமுதீன், ஆா்.வெங்கடேசன், என்.முத்துக்குமாரசாமி, என்.ராமமூா்த்தி, எம்.மகேந்திரன், ஜெயராமன், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தவெக தோ்தல் வாக்குறுதியில் அளித்தபடி, 5 ஏக்கா் வரையிலான விவசாயிகளுக்கு முழுக்கடனையும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவீத கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். உர விலை ஏற்றத்துக்கு மத்திய அரசு கூடுதல் மானியம் வழங்கி, உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயிா் கூடுதல் ஒதுக்கீடு பெற்று ஒரு விவசாயிக்கு 25 குண்டால் வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் முத்துக்குமரன், சண்முகம், ஜி.முத்துக்குமாரசாமி, ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.









