எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி. - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:31 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திட்டக்குடி அருகே ஆலத்தூா் வெள்ளாற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநத்தம் காவல் ஆய்வாளா் செல்வநாயகம், உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம், தனிப் பிரிவு தலைமைக் காவலா் அருண் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

அப்போது, ஆலந்தூா் வெள்ளாற்றில் மினி லாரி மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபா்கள் ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா் திட்டக்குடி வட்டம், வடகராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலை (55) தேடி வருகின்றனா்.