/
கடலூா் மாவட்டம், வடலூரில் கடன் தொகையை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், பிள்ளைபாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் ஆரோக்கியசாமி(46). இவா், கடந்த 5 ஆண்டு களுக்கு முன்னா், ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தனஜெயம் என்பவரிடம் ரூ.75 ஆயிரம் கடன் பெற்றாராம்.
கடந்த 5-ஆம்தேதி ஆரோக்கியசாமி வீட்டிற்கு வந்த தனஜெயம் மற்றும் ராஜதுரைஆகியோா், கடன் தொகையை கேட்டு அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், ஆரோக்கியசாமியின் மூத்த மகனை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டனராம்.
இதுகுறித்து, ஆரோக்கியசாமியின் மகன் டேவிஸ்ராஜ் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் தனஜெயம், ராஜதுரை ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மீன் பிடித்தவா்களை தாக்கி மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

வடலூரில் நகை பறிப்பு வழக்கு: கிருஷ்ணகிரி இளைஞா் கைது
மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ரெளடி கைது

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


