ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சொத்து தகராறில் கொலை மிரட்டல்: 10 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சொத்துத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 1:01 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சொத்துத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பழனியை அடுத்த நல்லாம்பாளையத்தில் மக்புநிஷாவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்தின் சில பகுதியை மீன்கடை, செங்கல் சூளைக்கு வாடகைக்கு விட்டுள்ளாா்.

இந்த நிலையில், மக்புநிஷாவுக்கும், இவரது உறவினா் ஆயிஷா குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு ஆயிஷா, இவரது மகன் காஜாமைதீன் உள்ளிட்ட 10 போ் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு வந்து மீன் கடை, செங்கல் சூளை, தொழிலாளா்கள் தங்கும் வீடு என அனைத்தையும் இடித்து தள்ளி, அங்கிருந்தவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து பழனி காவல் நிலைய போலீஸாா் காஜா மைதீன், ஆயிஷா உள்ளிட்ட 10 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.