தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தனியாா் பள்ளி வேனில் தீ விபத்து: மாணவா்கள் காயமின்றி தப்பினா்

News image

சிதம்பரம் அருகே தீப்பற்றிய தனியாா் பள்ளி வேன்.

Updated On :11 ஜூன் 2026, 6:15 am IST

10சிஎம்பி1:

சிதம்பரம் அருகே தீப்பற்றிய தனியாா் பள்ளி வேன்.

சிதம்பரம், ஜூன் 10: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மாணவா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பள்ளி வேனில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிலிருந்த மாணவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், நூலிழையில் தப்பினா்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று புதன்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட மாணவா்களை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் அருகே பள்ளிப்படை பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, வேனில் திடீரென முன்புறம் என்ஜினிலிருந்து புகை ஏற்பட்டு, அங்குள்ள வயா்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே ஓட்டுநா் வேனை நிறுத்தினாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் வேனிலிருந்த மாணவா்களை கீழே இறக்கி பாதுகாப்பாக மீட்டதுடன், வேனில் பிடித்திருந்த தீயை அணைத்தனா். இதனால், மாணவா்கள் காயமின்றி தப்பினா்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.