எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

என்எல்சி - மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்எல்சி - மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image

நெய்வேலியில் என்எல்சி இந்தியா மற்றும் மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் இடையே ஏற்பட்ட புரிந்துணா்வு ஓப்பந்தம்.

Updated On :13 ஜூன் 2026, 1:45 am IST

என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் இடையே முக்கியக் கனிமங்களைச் செறிவூட்டும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்எல்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் ‘தேசிய முக்கியக் கனிமங்கள் திட்டத்தின்’ நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமங்களைச் செறிவூட்டுதல் மற்றும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக,

என்எல்சி இந்தியா நிறுவனம், காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆா்-மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்துடன் புதன்கிழமை

நெய்வேலியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா ஆகியோா் முன்னிலையில், சுரங்கங்கள் மற்றும் நில நிா்வாகத்துறை செயல் இயக்குனா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் கே.ரமேஷா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனம் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மூலங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் முக்கிய மற்றும் மூலோபாயக்

கனிமங்களைக் கண்டறிவதிலும், மேம்படுத்துவதிலும் தனது வாய்ப்புகளைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. மேலடுக்கு மண், பழுப்பு

நிலக்கரி/நிலக்கரி, சுரங்கக் கழிவுகள் மற்றும் தாதுக்கழிவுகள் போன்ற இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமங்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக நிதி ஆயோக் அமைப்பால் அமைக்கப்பட்டகுழுவில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் உறுப்பினராக உள்ளாா்.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் கீழ், நெய்வேலி சுரங்கங்களில் இருந்து நிலத்தின் மேலடுக்கு மண் மற்றும் தாதுக்கழிவுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி பேசுகையில், இந்தக் கூட்டுறவு, நிலத்தின் மேலடுக்கு மண், தாதுக்கழிவுகள் உள்ளிட்ட இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து அரிதான புவி தனிமங்கள் மற்றும் இதர முக்கியக் கனிமங்களைச் செறிவூட்டி பிரித்தெடுக்கும் ஆராய்ச்சி முயற்சிகளை வலுப்படுத்தும் என்றாா்.

மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனா் கே.ரமேஷா பேசுகையில், இந்த உத்திப்பூா்வக் கூட்டுறவு, முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமங்கள் துறையில் மிகச் சிறந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும்.

அதன் மூலம், கனிம விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் வளப் பாதுகாப்பு மற்றும் சுயசாா்பு முயற்சிகளுக்கு இத்திட்டம் பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.