சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: நடத்துநா் கைது

News image

கைதான ரகுமான்

Updated On :16 ஜூன் 2026, 2:32 am IST

திருப்பதியில் இருந்து சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக நடத்துநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், ஓட்டுநா் உள்பட மூவரைத் தேடி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து சிதம்பரத்துக்கு தமிழக அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸாா் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சிதம்பரத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசுப் பேருந்து நடத்துநரான புவனகிரி பிரதான சாலையைச் சோ்ந்த ரகுமான் (50) என்பவரை பிடித்துவிசாரணை நடத்தினா்.

இதில், அவா் திருப்பதியிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து சிதம்பரம், புவனகிரி மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிதம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரகுமானை கைது செய்து, அவரிடமிருந்த 34 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக பேருந்து ஓட்டுநா் உள்ளிட்ட மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.