இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு: கிள்ளை பேரூராட்சியில் தீா்மானம்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

சிதம்பரம் அருகே கிள்ளையில் நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:24 am IST

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் மல்லிகா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், செயல் அலுவலா் மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றினாா். கூட்டத்தில் கிள்ளை பேரூராட்சிக்குள்பட்ட முழுக்குத்துறை, முடசல்ஓடை, எம்ஜிஆா் திட்டு ஆகிய பகுதிகளை இணைத்து கிழக்கு கடற்கரையோரம் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.