ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16.59 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்துக்கு ரூ.16.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:37 am IST

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்துக்கு ரூ.16.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு நெல் இயந்திர நடவு மானியம், நேரடி விதைப்பு மானியம், தரமான சான்றிதழ் பெற்ற விதைகள், உயிரி, நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இயந்திர நடவு முறையில் நெல் நடவு அல்லது நேரடி விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான நெல் இயந்திர நடவு மானியத் திட்டத்துக்கு 38,520 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், இயந்திர நடவு மேற்கொண்டதற்கான ரசீது மற்றும் இயந்திர நடவு செய்யப்பட்ட வயலில் விவசாயி நிற்கும் புகைப்படம் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட பகுதி உதவி வேளாண் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இதேபோல, தரமான சான்று பெற்ற விதைகள், உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களைப் பெறத் தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து, அவற்றை அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.