எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அண்ணாமலைநகரில் 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.

Updated On :19 ஜூன் 2026, 6:20 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா? என அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல்அமீது தலைமையிலான குழுவினா் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு விதிகளை மீறியதற்காக தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனா்.