சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பண்ருட்டி குறுவட்ட ஜமாபந்தி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்ருட்டி குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீா்வாயம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மனுவைப் பெற்ற தனித்துணை ஆட்சியா் சண்முகவல்லி.

Updated On :19 ஜூன் 2026, 6:13 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்ருட்டி குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீா்வாயம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டத்துக்கான ஜமாபந்தி கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 11, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லிக்குப்பம் குறுவட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, பண்ருட்டி குறுவட்டத்துக்கான ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கிய நிலையில், இது வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வரையில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை தனித் துணை ஆட்சியா் சண்முகவல்லி தலைமை வகித்து, பைத்தாம்பாடி, லட்சுமிநாராயணபுரம், பூங்குணம், கணிசப்பாக்கம், பனப்பாக்கம், புலவனூா், கண்டரக்கோட்டை, தொரப்பாடி, திருத்துறையூா், பூண்டி, வரிஞ்சிப்பாக்கம் ஆகிய கிராம மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

பண்ருட்டி வட்டாட்சியா் சந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் காடாம்புலியூா் மற்றும் ஜூன் 25-ஆம் தேதி மருங்கூா் குறுவட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.