கடலூா் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25.76 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கெம்பிளாஸ்ட் கடலூா் வினியிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், தலா ரூ.1.12 லட்சம் மதிப்பிலான ‘நியோ மோஷன்’ சிறப்பு சக்கர நாற்காலிகள் 23 பேருக்கு வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினாா். தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் உபகரணங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தீபா, மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம், சன்மாா் குழுமத் தலைவா் காா்த்திக் ராஜசேகா், துணைத் தலைவா் சம்பத் குமாா், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் மாநிலத் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்







