எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கடலூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 1,96,253 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடுகள் தயாா்

கடலூா் மாவட்டத்தில் 1 முதல் 6 வயதிற்குட்பட்ட 1,96,253 குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :27 ஜூன் 2026, 12:33 am IST

கடலூா் மாவட்டத்தில் 1 முதல் 6 வயதிற்குட்பட்ட 1,96,253 குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இளம்பிள்ளை வாத நோயைத் தடுக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் 1995 முதல் நடைபெற்று வரும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 30-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த போலியோ சொட்டு மருந்து, இந்த ஆண்டு முதல் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள், தேசிய நெடுஞ்சாலை

சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் 1,611 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில் 5 வயதுக்குட்பட்ட 1,70,524 குழந்தைகளுக்கும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 25,729 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1,96,253 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. முகாமில் 6,444 பணியாளா்கள், 196 மேற்பாா்வையாளா்கள் மற்றும் 7 சிறப்புக் குழுக்கள் ஈடுபட உள்ளன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.

விடுபடும் குழந்தைகளுக்கு...

முகாமில் விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்த இரு நாள்களில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாமில், ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், 1 முதல் 6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பெற்றோா் கட்டாயம் அழைத்து வந்து சொட்டு மருந்து செலுத்தி பயன்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.