ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

விண்வெளி ஆராய்ச்சியில் இளைய தலைமுறையினா் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம்: என்எல்சி தலைவா்

அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியமானதாகும் என்று என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

News image

நெய்வேலியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்வை தொடங்கிவைத்த என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி. உடன் என்எல்சி அதிகாரிகள், மாணவா்கள்

Updated On :8 மார்ச் 2026, 1:55 am IST

அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியமானதாகும் என்று என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

என்எல்சி நிறுவனத்தின் கல்வித் துறை சாா்பில், ‘விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு ஆய்வுக் கருவிகளை ஏவும் உயரடுக்கு வளி மண்டல பலூன் திட்டம்’ என்ற தலைப்பிலான அறிவியல் நிகழ்வு நெய்வேலியில் உள்ள பாரதி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு ஆய்வுக்கருவிகளை சுமந்து செல்லும் உயரடுக்கு வளிமண்டல பலூன் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை சுமாா் 2,000 மாணவா்கள் பாா்வையிட்டனா்.

என்எல்சி பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதி குறித்த ஆய்வு மற்றும் அறிவியல் தரவு சேகரிப்பு போன்ற கருத்துகளில் மதிப்புமிக்க நேரடி அனுபவத்தைப் பெற்றனா்.

நிகழ்ச்சியில், என்எல்சி நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது: ஆற்றலும், அறிவும் தேசத்தின் வளா்ச்சிக்கு மிக முக்கியமான தூண்களாகும். அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியமானதாகும்.

என்எல்சி நிறுவன பள்ளி மாணவா்கள், மேம்பட்ட அறிவியல் கருத்துகள் மற்றும் நேரடி கற்றல் அனுபவங்களைப் பெற்று வருகின்றனா். இந்த மாணவா்கள், விண்வெளி ஆய்வுக் கருவியின் வெற்றிகரமான ஏவுதல் மூலம் விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து தகவல்களை பூமிக்கு கொண்டு வருகின்றனா். நிஜ உலக அறிவியல் சோதனைகளில், மாணவா்கள் நேரடியாக ஈடுபடுவதற்கு இத்தகைய அா்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்கிய கல்வித் துறைக்கும், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி விண்வெளித் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற 25 மாணவிகளும் பாராட்டுகள் என்றாா்.

இயக்குநா் சமீா் ஸ்வரூப், செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.