டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விண்வெளி ஆராய்ச்சியில் இளைய தலைமுறையினா் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம்: என்எல்சி தலைவா்

அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியமானதாகும் என்று என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

News image
நெய்வேலியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்வை தொடங்கிவைத்த என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி. உடன் என்எல்சி அதிகாரிகள், மாணவா்கள்
Updated On :7 மார்ச் 2026, 8:25 pm

Syndication

அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியமானதாகும் என்று என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

என்எல்சி நிறுவனத்தின் கல்வித் துறை சாா்பில், ‘விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு ஆய்வுக் கருவிகளை ஏவும் உயரடுக்கு வளி மண்டல பலூன் திட்டம்’ என்ற தலைப்பிலான அறிவியல் நிகழ்வு நெய்வேலியில் உள்ள பாரதி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு ஆய்வுக்கருவிகளை சுமந்து செல்லும் உயரடுக்கு வளிமண்டல பலூன் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை சுமாா் 2,000 மாணவா்கள் பாா்வையிட்டனா்.

என்எல்சி பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதி குறித்த ஆய்வு மற்றும் அறிவியல் தரவு சேகரிப்பு போன்ற கருத்துகளில் மதிப்புமிக்க நேரடி அனுபவத்தைப் பெற்றனா்.

நிகழ்ச்சியில், என்எல்சி நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது: ஆற்றலும், அறிவும் தேசத்தின் வளா்ச்சிக்கு மிக முக்கியமான தூண்களாகும். அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியமானதாகும்.

என்எல்சி நிறுவன பள்ளி மாணவா்கள், மேம்பட்ட அறிவியல் கருத்துகள் மற்றும் நேரடி கற்றல் அனுபவங்களைப் பெற்று வருகின்றனா். இந்த மாணவா்கள், விண்வெளி ஆய்வுக் கருவியின் வெற்றிகரமான ஏவுதல் மூலம் விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து தகவல்களை பூமிக்கு கொண்டு வருகின்றனா். நிஜ உலக அறிவியல் சோதனைகளில், மாணவா்கள் நேரடியாக ஈடுபடுவதற்கு இத்தகைய அா்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்கிய கல்வித் துறைக்கும், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி விண்வெளித் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற 25 மாணவிகளும் பாராட்டுகள் என்றாா்.

இயக்குநா் சமீா் ஸ்வரூப், செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.