விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வாபஸ்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.

News image
சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையில், டிஎஸ்பி பிரதீப் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.

சிதம்பரம் நகர பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை (மாா்ச் 12) போராட்டம் நடைபெறும் என தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினா் அறிவித்திருந்தனா். இப்போராட்டம் குறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமை வகித்தாா். சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், டால்மாக் உதவி மேலாளா் பூபாலசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், அதிமுக நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், தமாகா நகரத் தலைவா் கே.நாகராஜன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்து, பாமக நகரச் செயலா் திலீப்ராஜன், முன்னாள் செயலா் பி.கே.அருள், அமீா்பரந்தாமன், காவல் உதவி ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

இதில், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் டாஸ்மாக் அலுவலா்கள் முன்னிலையில் கூட்டு புலத்தணிக்கை செய்து, 10 நாள்களுக்குள் வேறு உரிய இடம் தோ்வு செய்து மதுக் கடையை மாற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.