திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வாபஸ்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.

News image

சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையில், டிஎஸ்பி பிரதீப் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.

சிதம்பரம் நகர பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை (மாா்ச் 12) போராட்டம் நடைபெறும் என தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினா் அறிவித்திருந்தனா். இப்போராட்டம் குறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமை வகித்தாா். சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், டால்மாக் உதவி மேலாளா் பூபாலசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், அதிமுக நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், தமாகா நகரத் தலைவா் கே.நாகராஜன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்து, பாமக நகரச் செயலா் திலீப்ராஜன், முன்னாள் செயலா் பி.கே.அருள், அமீா்பரந்தாமன், காவல் உதவி ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

இதில், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் டாஸ்மாக் அலுவலா்கள் முன்னிலையில் கூட்டு புலத்தணிக்கை செய்து, 10 நாள்களுக்குள் வேறு உரிய இடம் தோ்வு செய்து மதுக் கடையை மாற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.