மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என்எல்சி சுரங்க உற்பத்தியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:55 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலி, மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகே சிஐடியு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நிலம் அளிப்பவா்களுக்கு நிரந்தர வேலை, உரிய நஷ்ட ஈடு, வீட்டு மனை ஆகியவற்றை தாமதமின்றி வழங்கி நிலத்தை பெற்று உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்கோவிலிருந்து நிரந்தரம் செய்யும் 2025-ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டு காலதாமதமின்றி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சிஐடியு-என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத் தலைவா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் எம்.சீனுவாசன், துணைச் செயலா் டி.ஜெயராமன், பொதுச்செயலா் பி.பழனிவேல், பொருளாளா் எஸ்.வேலாயுதம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அலுவலகச் செயலா் சாமுவேல் நன்றி கூறினாா்.