சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ரத்ததான முகாம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:56 pm

சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார (பவா்) கம்பெனியில், ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பவா் கம்பெனி தலைமை நிலைய அதிகாரி குகன் தலைமை வகித்து, ரத்தான முகாமை தொடங்கி வைத்தாா். தலைமை அதிகாரிகள் முருகன்,

சுப்ரமணியன், மனிதவள துறை அதிகாரி தேவபிரசாத் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சிவகாமி

தலைமையில், மருத்துவ குழுவினா்கள் 65 நபா்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனா். முகாமில், டாக்டா்கள் மிதிலைராஜன், அவினாஷ் , சுகாதார ஆய்வாளா்கள் ரிச்சா்ட் எட்வின்ராஜ், அன்புராஜ், ஆய்வக உதவியாளா் அவிரவன், உட்பட பலா் பங்கேற்றனா்.