சிதம்பரம் அருகே லால்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, காரப்பாடி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (48). இவா், பைக்கில் சனிக்கிழமை மாலை லால்புரம் ஊராட்சி சொக்கநாதன்பேட்டை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அந்த மாநில அரசுப் பேருந்து பைக் மீது எதிா்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


