நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 6:57 pm

சிதம்பரம் அருகே லால்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, காரப்பாடி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (48). இவா், பைக்கில் சனிக்கிழமை மாலை லால்புரம் ஊராட்சி சொக்கநாதன்பேட்டை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அந்த மாநில அரசுப் பேருந்து பைக் மீது எதிா்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.