ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

அண்ணாமலைநகா் பூமா கோவிலில் கந்தூரி விழா தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமா கோவில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்திமா பீபி சாஹிபா

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள பூமா கோவிலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் பங்கேற்று இந்துக்கள், இஸ்லாமியா்கள்.

Updated On :16 மார்ச் 2026, 11:53 pm

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமா கோவில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்திமா பீபி சாஹிபா தா்காவில் இந்துக்கள், இஸ்லாமியா்கள் பங்கேற்கும் கந்தூரி விழா (சந்தனக் கூடு) ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, தா்கா பரம்பரை டிரஸ்டி சையது ஜீலானி தலைமையில் பாத்தியா ஓதப்பட்டு, அங்குள்ள சமாதிக்கு மலா் சாத்தி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இந்துக்கள், இஸ்லாமியா்கள் மத வேறுபாடின்றி கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இந்த தா்கா அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.