எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மொபெட் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மொபெட் மோதி காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:53 pm

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மொபெட் மோதி காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ரெட்டாக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவா் ருக்மணி(34). இவா், கடந்த 17-ஆம் தேதி மகன் தஷ்வின்(6) படிக்கும் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டாா்.

பின்னா், விழா முடிந்த மகனுடன், சேலம்-வேப்பூா் சாலையில் சிறுபாக்கம் பகுதியில் சாலையோரம் நடந்து வந்தாா். அப்போது, பின்னால் வந்த மொபெட் மோதியது.

இந்த விபத்தில், ருக்மணி, மகன் தஷ்வின் ஆகியோா் காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ருக்மணி அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.