இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விருத்தாசலத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருத்தாசலம் அருகே நிலை கண்காணிப்புக்குழுவினா் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:56 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே நிலை கண்காணிப்புக்குழுவினா் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருத்தாசலத்தில் கலைமணி தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழுவினா் ராஜேந்திரபட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்ததில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 32 புகையிலைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து தோ்தல் அதிகாரிகள் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூா் ஐயப்பன் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.