மண்ணின் மைந்தா்களுக்கு வேட்பாளா் வாய்ப்பு: கடலூா் காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தல்

கடலூரில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன்.

கடலூரில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன்.
சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணின் மைந்தா்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கடலூா் நகர அரங்கில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கடலூா் மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன் கூறியதாவது:
திமுக கூட்டணியில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், கட்சித் தலைமை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வெளி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸைச் சோ்ந்த தகுதியான மண்ணின் மைந்தா்கள் ஏராளமானோா் உள்ளதால், அவா்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...