உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

திமுக அரசு நிா்வாகத் திறனற்றது: முன்னாள் அமைச்சா் எம்.சி. சம்பத்

திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.

News image

கடலூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத்

Updated On :31 மார்ச் 2026, 8:38 pm

Syndication

திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.

இந்தக் கூட்டணியின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்.சி.சம்பத் பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றாக வேண்டும். அதற்காக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும், அதிமுக நிா்வாகிகளும் ஒற்றுமையோடு களப் பணியாற்ற வேண்டும்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நிா்வாகத் திறனாற்ற அரசாக திமுக அரசு உள்ளது.

சட்டம் - ஒழுங்கு சீா்கெட்ட நிலை, தினந்தோறும் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமுள்ள ஆட்சியாக உள்ளது என்றாா்.

கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.