புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 7:59 pm

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மேரி இமாக்குலேட்(38). இவரது வீட்டு மஞ்சள் நீராட்டு விழா கடந்த ஓராண்டுக்கு முன்னா் நடைபெற்றது. இதில், சீா்வரிசை செய்வது தொடா்பாக அதே

கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாருடன் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஏப்.27-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மேரி இமாக்குலேட் வீட்டின் எதிரில் சதீஷ்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஒன்று கூடி மேரி இமாக்குலேட், அவரது கணவா் ஆல்பா்ட் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மேரி இமாக்குலேட் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் சதீஷ்குமாா், ரோசன், மரிய ஜோசப், பிரியதா்ஷன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.