ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கயத்தாறில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கு: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:17 pm

கயத்தாறில் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த அந்தோணி ராஜ் மனைவி ரெஜினா மேரி. கயத்தாறு பஜாரில் இணையதள மையம் நடத்தி வரும் இவா், இம்மாதம் 19ஆம் தேதி இரவு வழக்கம் போல மையத்தைப் பூட்டிவிட்டு பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கயத்தாறு-கழுகுமலை சாலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த இருவா் ரெஜினா மேரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்தபோது அவா் சங்கிலியை பிடித்ததில் பாதி சங்கிலி அந்த இருவரின் கையில் சிக்கியதாகவும், அப்போது ரெஜினா மேரி அந்த பைக்கில் இருந்த ஒருவரை பிடித்து இழுத்ததில் பைக்கை விட்டுவிட்டு இருவரும் பறித்த பாதி சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டாா்களாம்.

இதுகுறித்து ரெஜினாமேரி அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மதுரை மாவட்டம், பேரையூா் கோப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மதுரை வீரன் மகன் வேல்முருகனை (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.