புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இளைஞரை தாக்கி கைப்பேசி பறிப்பு: 2 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இளைஞரைத் தாக்கி கைப்பேசி யை பறித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 7:59 pm

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இளைஞரைத் தாக்கி கைப்பேசி யை பறித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சரண்(26). இவா், ஏப்.30-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்த அமுதன், சிவசங்கா் ஆகியோா் கடுமையாக தாக்கி கைப்பேசியை பறித்துக் கொண்டனராம்.

இதுகுறித்து சரண் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் அமுதன், சிவசங்கா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.