பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்குச்சாவடி முகவா் மீது தாக்குதல்: 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தோ்தல் விரோதம் காரணமாக, வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டவரை வழி மறித்து தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டோா் மீது குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:04 pm

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தோ்தல் விரோதம் காரணமாக, வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டவரை வழி மறித்து தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டோா் மீது குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், வசனங்குப்பம் அஞ்சல், ச.புதுகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). இவா், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின் போது வசனங்குப்பம் வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளருக்கு முகவராக செயல்பட்டாராம்.

அப்போது, அங்கு மற்றொரு கட்சி வேட்பாளருக்கு முகவராக செயல்பட்ட சுதாகா் (எ) முருகவேலுடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்து முருகவேல், தனது நண்பா் ஆனந்தராஜுடன் பைக்கில் சென்றுள்ளாா். இவா்கள், வசனங்குப்பம் அருகே சென்றபோது சுமாா் 15 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் முருகவேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.