நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பொள்ளாச்சி அருகே பெண்ணை தாக்கியதாக திமுகவினர் மீது புகார்

வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 11:49 pm

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர், வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

கிணத்துக்கடவை அடுத்த நல்லட்டிபாளையம் பகுதியில் திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நாகேஸ்வரி என்பவரது வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளனர். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து, "நாங்கள் வசிக்கும் வீடு வாடகை வீடு, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்கு சேகரிக்க வந்த நபர்கள், நாகேஸ்வரியையும், அவரது கணவர் பிரதீப்பையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் அளித்துள்ளார். காயமடைந்த அவர் கிணத்துக்கடவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அந்தப் பெண் தான் கைக்குழந்தையுடன் இருந்தபோது தாக்கியதாகத் தெரிவிக்கும் அவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.