கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர், வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
கிணத்துக்கடவை அடுத்த நல்லட்டிபாளையம் பகுதியில் திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நாகேஸ்வரி என்பவரது வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளனர். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து, "நாங்கள் வசிக்கும் வீடு வாடகை வீடு, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்கு சேகரிக்க வந்த நபர்கள், நாகேஸ்வரியையும், அவரது கணவர் பிரதீப்பையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் அளித்துள்ளார். காயமடைந்த அவர் கிணத்துக்கடவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அந்தப் பெண் தான் கைக்குழந்தையுடன் இருந்தபோது தாக்கியதாகத் தெரிவிக்கும் அவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

பழனியில் தவெக வேட்பாளா் தீவிர வாக்குசேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பா்கூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


