சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பொள்ளாச்சி அருகே பெண்ணை தாக்கியதாக திமுகவினர் மீது புகார்

வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 5:19 am IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர், வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

கிணத்துக்கடவை அடுத்த நல்லட்டிபாளையம் பகுதியில் திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நாகேஸ்வரி என்பவரது வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளனர். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து, "நாங்கள் வசிக்கும் வீடு வாடகை வீடு, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்கு சேகரிக்க வந்த நபர்கள், நாகேஸ்வரியையும், அவரது கணவர் பிரதீப்பையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் அளித்துள்ளார். காயமடைந்த அவர் கிணத்துக்கடவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அந்தப் பெண் தான் கைக்குழந்தையுடன் இருந்தபோது தாக்கியதாகத் தெரிவிக்கும் அவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.