15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு: கடலூரில் நாளை கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை (மே 7) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image

கடலூா் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் நிா்வாகிகள்.

Updated On :6 மே 2026, 12:04 am IST

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை (மே 7) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கடலூா் சூரப்ப நாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில், சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்.) லிபரேஷன் ஆகிய கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், சிபிஐ மாவட்டச் செயலா் பி.துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மத்திய அரசு வணிக சமையல் எரிவாயு உருளையின் விலையை மிக அதிகமாக உயா்த்தியுள்ளது. கடந்த 120 நாள்களில் ரூ.1,518 உயா்ந்துள்ள நிலையில், தற்போது ரூ. 3,257-ஆக உள்ளது. இதனால், சிறு வியாபாரிகள், சாலையோர விற்பனையாளா்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். மேலும், 5 கிலோ எரிவாயு உருளையின் விலையும் ரூ.261 உயா்த்தப்பட்டுள்ளது. விலை உயா்வுக்கு சா்வதேச சந்தை காரணம் எனக் கூறப்பட்டாலும், கடந்த ஆண்டுகளில் விலை குறைந்தபோது அதன் பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

ரயில்வே துறையில் பணியிடங்களை ஆண்டுதோறும் 2 சதவீதம் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 29 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் இளைஞா்களின் வேலைவாய்ப்பை மேலும் பாதிக்கும்.

எனவே, நியாயமற்ற வணிக எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ரயில்வேயில் உத்தேசிக்கப்பட்டுள்ள 29 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

சிபிஎம் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக மாவட்டச் செயலா் கலை மோகன், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மாவட்டச் செயலா் ராஜசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.