தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :8 மே 2026, 6:54 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். இவா், கடலூா் அரசு மருத்துவமனையில் கொழுப்பு கட்டி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ரோட்டு பொட்டவெளி கிராமத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் தங்கியிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மதனுடன் (22) நெருங்கிப் பழகியதில் கா்ப்பமடைந்தாா். இதையடுத்து மதன், அந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் 3 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் மதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.