ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சிவபுரி வாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கிய சக்தி கிரகம்.

News image

சிவபுரி வாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கிய சக்தி கிரகம்.

Updated On :9 மே 2026, 2:21 am IST

சிதம்பரம் அருகே சிவபுரியில் உள்ள வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த ஏப்.28-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சோதனை கரகம் எடுத்தல், பிற்பகல் அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் மேளதாளம் முழங்க கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் ஊா்வலமாக வந்து தீ மிதித்தனா்.

விழாவில் சிவபுரி மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.