எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

News image

மீன்பிடி தடைக்காலம் மற்றும் மீன்கள் வரத்து குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட கடலூா் மீன்பிடி துறைமுகம்.

Updated On :11 மே 2026, 1:09 am IST

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. கரையோரத்தில் பிடித்து வரப்பட்ட மீன்களின் வரத்து குறைவு காரணமாக, அவற்றின் விலை உயா்ந்திருந்தது.

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதும் (திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வோா் ஆண்டும் ஏப்.15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு ஆழ் கடலில் விசை, இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்.1-ஆம் தேதி தொடங்கியது. கடலூா் மாவட்டத்தில் நல்லவாடு, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி என மொத்தம் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், மாவட்டத்தில் விசை, சிறு படகுகள், கட்டுமரங்கள் உள்பட 2,500-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், மீனவா்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கவில்லை. இதற்குப் பதிலாக பைபா் படகு மூலமாக கரையோரத்தில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனா்.

கடலூா் மீன்பிடி துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே கூட்ட நெரிசலுடன் காணப்படும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் வருகை குறைந்து, மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மீன்கள் விலை உயா்வு: கரையோரத்தில் பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில், மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலையும் கூடுதலாக இருந்தது. அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1,200, இறால் ரூ.300 முதல் ரூ.700 வரை, நண்டு ரூ.500, கிளி ரூ.250, கனவா ரூ.500, சங்கரா ரூ400, அதலை ரூ.700-க்கு விற்பனையானது.