கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பலாப்பழ வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து கிராமத்தில் வசித்து வந்தவா் ராமசாமி (56), பலாப்பழ வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் வியாபாரத்திற்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தாா்
உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினா். ஆனால், கிடைக்கவில்லை. கைப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொண்ட நிலையில், அதையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நெய்வேலிஆா்ச்-வடலூா் சாலையில் ரோட்டு பூசாலிக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான அறைகலன் கடை முன்பாக, ஒருவா் இறந்து கிடப்பதை பாா்த்த கடை உரிமையாளா், அவா் காணாமல்போன பலாப்பழ வியாபாரி ராமசாமி என்பதை விசாரித்து தெரிந்துகொண்டாா்.
இதுகுறித்து, ராமசாமியின் மகன் சங்கருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கா் சடலத்தை பாா்த்து உறுதி செய்தாா். அதற்குள் தகவலறிந்து வந்த வடலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக சங்கா் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞா் மா்ம மரணம்

பிளஸ் 2 மாணவி மா்ம மரணம்

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

