முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளா்களின் மீது காவல் துறையினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் சிஐடியு அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளா்களின் மீது காவல் துறையினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் தொழிலாளா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு ஆதரவாகப் போராடும் தொழில் சங்கத் தலைவா்களை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

கடலூரில் மாவட்ட சிஐடியு அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலா் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டத் தலைவா் பி.கருப்பையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.பழனிவேல், ஏஐடியுசி மாவட்டச் செயலா் எஸ்.குணசேகரன், யுடியுசி மாவட்டச் செயலா் கே.சம்மந்தம், ஏஐடியுசி தெருவோர வியாபாரிகள் சங்க மாநில பொதுச் செயலா் குளோப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.