கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்த நபரை, பண்ருட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்(32). இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம்,
தள்ளாகுளத்தில் உள்ள ஒரு கோயிலில் 27.6.2025 அன்று திருமணம் செய்துக் கொண்டனா். பின்னா், சென்னை கோட்டூா்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா். சிறுமி கா்ப்பமடைந்ததால், அட்டை போடுவதற்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு 27.4.2026 அன்று வந்தாா்.
அப்போது, மருத்துவா்கள் சிறுமி விவரம் குறித்த தகவல்களை பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினா். இதனையடுத்து மகளிா் போலீஸாா் பாண்டியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது
எட்டாம் வகுப்பு மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

14 வயது சிறுமி கா்ப்பம்; போலீஸாா் விசாரணை

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
