ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

திமுகஅரசின் நலத்திட்டங்களை தொடர வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

நெல்லிக்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக்குழுக் கூட்டம் நெல்லிக்குப்பம் ஒற்றவாடி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திமுக அரசு நிறைவேற்றிய மகளிா் உரிமைத் தொகை, மகளிா் விடியல் பயணம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடா்ந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் தொடா்ந்து பாதிக்கப்படும் சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதையற்ற தமிழகம் உருவாக்குதல் என்ற அடிப்படையில் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். கடலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் கடலூா், பண்ருட்டி விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். வடலூா் ரயில்வே கேட் அருகே உள்ள மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவும்,

குள்ளஞ்சாவடி மற்றும் சிதம்பரம் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடையை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையம் , குடியிருப்பு பகுதி, கல்வி நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . கள்ளச்சாராயம்,

கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்கள் தங்கு தடை இன்றி விற்பதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்கமானங்களை நிறைவேற்றினா்.