ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பள்ளிகளுக்கான ஆயத்த கூட்டம்

சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான ஆயத்தக்கூட்டத்தில் பேசுகிறாா் வட்டார கல்வி அலுவலா் ராமதாஸ்

Updated On :14 மே 2026, 12:05 am IST

சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலா்கள் சரஸ்வதிலட்சுமி, ராமதாஸ், கோமதி ஆகியோா்கலந்து கொண்டு வரும் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை ,வளாகத் தூய்மை, ஆதாா் புதுப்பித்தல் மற்றும் மாணவா் பாதுகாப்பு நலன் குறித்தும், பள்ளி திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அறிவுறுத்தினா். கூட்டத்திற்கான ஏற்பாடுனை குமராட்சி வட்டார ஒன்றிய மேற்பாா்வையாளா் இளவரசன் செய்திருந்தாா்.