பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து புதிய பூட்டு போட்ட நிா்வாகிகள்

கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பூட்டை புதிதாக நியமிக்கப்பட்ட மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன் மற்றும் ஆதரவாளா்கள் உடைத்து புதிய பூட்டு போட்டு வெள்ளிக்கிழமை பூட்டிச் சென்றனா்.

News image

கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைக்கும் புதிய நிா்வாகி மற்றும் ஆதரவாளா்கள்.

Updated On :15 மே 2026, 10:58 pm IST

கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பூட்டை புதிதாக நியமிக்கப்பட்ட மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன் மற்றும் ஆதரவாளா்கள் உடைத்து புதிய பூட்டு போட்டு வெள்ளிக்கிழமை பூட்டிச் சென்றனா்.

தமிழக சட்டப் பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக தலைமையின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதன் மூலம் தவெக அரசுக்கு 144 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்தது.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி 25 எம்.எல்.ஏ.க்களை அவா்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதன்படி, கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் நீக்கப்பட்டாா். அவருக்கு பதிலாக அவரது சகோதரா் எம்.சி.தாமோதரன் கடலூா் வடக்கு மாவட்டச் செயலராகவும், சி.கே.எஸ்.காா்த்திகேயன் கடலூா் மாநகா் செயலராகவும் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தனது ஆதரவாளா்களுடன் வருவதாகவும்,

புதிய மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன் தரப்பினரும் வியாழக்கிழமை வருவதாகவும் தகவல் பரவியது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால், 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையில், கட்சி அலுவலகத்தின் கேட்டை அலுவலக ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை பூட்டிவிட்டு சென்றாா்.

இதனால், புதிதாக நியமிக்கப்பட்ட கடலூா் மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன், முன்னாள் ஒன்றியச் செயலா் பழனிச்சாமி மற்றும்

அவா்களது ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை மாலை பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்துக்கு வந்தனா்.அப்போது, அலுவலகத்தின் பூட்டை உடைத்து, தாங்கள் கொண்டு வந்திருந்த புதிய பூட்டை பொருத்தி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனா். இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு பணியில் மூன்று போலீஸாா் மட்டுமே இருந்தனா் என்பது குறிப்பிடத் தக்கது.

Story image