11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

லாரியை வழிமறித்து இடையூறு: பாஜக நிா்வாகி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே நியாய விலைக்கடைக்கு பொருள்கள் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து இடையூறு செய்த, பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 மே 2026, 10:59 pm IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே நியாய விலைக்கடைக்கு பொருள்கள் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து இடையூறு செய்த, பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நகரிய காவல் சரகம், வடகுத்து பகுதியில் வசித்து வருபவா் பாபு (38),

பாஜக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவா். இவா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் கீழ் வடக்குத்து பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி முன்பு, பாபு தனது பைக்கை நிறுத்தி, கையில் தடியுடன் வழிவிடாமலும், லாரியிலிருந்து நியாய விலைக்கடைக்கான பொருள்களை இறக்க விடாமலும் தடுத்து இடையூறு செய்தாராம்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாா்லஸ், தலைமை காவலா் ராஜாராமன் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த பாபுவை போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.