11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

கடலூா் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூா் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே பனப்பாக்கம் டேங்க் தெருவைச் சோ்ந்த ராஜூ (27) என்பவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 14 -வயது சிறுமியை மே 14 ஆம் தேதி மாலை தனியாக அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால், அவரது பாட்டி பல இடங்களில் தேடியுள்ளாா்.

அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி மயக்க நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, ராஜூ தன்னை அடித்தும், கழுத்தை நெரித்தும், பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, ராஜூவை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.