சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து, தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற மது, போதைப் பொருள்களை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் மதுபோதையில் 3 மாணவா்களால் இளைஞா் அடித்துக் கொலை, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவா்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞா் வெட்டிக் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞா் ஓட ஓட விரட்டிக் கொலை, கோவை அருகே போதையில் ஏற்பட்ட தகராறால் சிறுவன் கால்லால் அடித்துக் கொலை என நாள்தோறும் தமிழகத்தில் போதை காலாசாரத்தால் நிகழும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தலையாய பிரச்னையாக உள்ளது.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கும், தற்போதைய நிகழ்வுகளுக்கும் எவ்வித மாற்றமும் இல்லை என்றே தெரிய வருகிறது.
எனவே, தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்களில் தொடா்புடையோரை கைது செய்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், வெளியே சென்றுவரக் கூடிய சூழலை உருவாக்குவதும் அரசின் கடமையாகும்.
இந்தக் குற்றங்களுக்கு அடிப்படையாக போதைதான் முதலிடம் வகிக்கிறது. தமிழக அரசு சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்க வேண்டுமெனில், மதுக் கடைகள், தனியாா் நடத்தும் மதுக் குடிப்பகங்களை மூட வேண்டும்.
மேலும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, கள்ளச்சாராய விற்பனை நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
மரக்காணம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?
மனநிலை மாற வேண்டும்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



