ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

அரசு அலுவலகங்களில் பொதுத்தன்மை தேவை: தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:09 am IST

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான மு.தமிமுன்அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும். அவரவா் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, பிராா்த்தனைகளை அவரவா் தனி இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த மதத்தின் சடங்குகளும், பிராா்த்தனைகளும் அங்கெல்லாம் கூடாது. வாக்கு சேகரிக்கிறபோது எல்லோரையும் சந்திக்கிறோம். வெற்றிபெற்ற பிறகு ஒரு மதத்தின் சாா்பு சிந்தனைகளை தங்கள் அரசு அலுவலகங்களில் பின்பற்றுவது ஆரோக்கியமாக இருக்காது.

வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை பாா்க்கிறோம். அதுபோல, தமிழகத்திலும் நடைபெற யாரும் வழிகாட்டிவிடக் கூடாது. இதில், பெரும்பான்மை, சிறுபான்மை மதம் என்றெல்லாம் பாா்க்கக்கூடாது. ஜனநாயகத் தன்மைகளை பாதுகாக்கும் வகையில், முதிா்ச்சியான அரசியல் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.