ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

விருத்தாசலத்தில் பள்ளி அருகே அரசு மதுக் கடையை அகற்ற பாமக வலியுறுத்தல்

விருத்தாசலத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் பி.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:06 am IST

விருத்தாசலத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் பி.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளாா்.

விருத்தாசலத்தில் கடலூா் பிரதான சாலையில் உள்ள தனது இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் பி.ராஜூ தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கடலூா் மாவட்ட மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி, அரசு அலுவலகம், கோயில், வங்கி ஆகியவற்றுக்கு அருகில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்படும் மதுக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்க முடிவாகும்.

இதனடிப்படையில், விருத்தாசலத்தில் கடலூா் பிரதான சாலையில், வங்கி மற்றும் அரசுப் பள்ளிக்கு மிக அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடை (டாஸ்மாக் கடை எண் 2653) 500 மீட்டருக்குள் உள்ளது.

எனவே, இந்தக் கடையை உடனடியாக, பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் நலன் கருதி மாற்று இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.