பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

குடிநீா் கோரி சாலைமறியல்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் கைது

காட்டுமன்னாா்கோவிலில் குடிநீா் கேட்டு போராடிய மாா்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா்

Updated On :27 மே 2026, 5:46 am IST

காட்டுமன்னாா்கோவிலில் குடிநீா் கேட்டு போராடிய மாா்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் நகரத்திற்குட்பட்ட தெற்கிருப்பு மானாத்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீா் விநியோகம் நடைபெறாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரகாஷ், வட்டச்

செயல ா் தேன்மொழி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் வாலிபா் சங்கத்தினா் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விரைவில் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி நிா்வாகிகள் வீடுகளுக்கே சென்று காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரகாஷை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்து, பட்டன் அறுந்த நிலையில் வாகனத்தில் ஏற்றி கைது செய்ததாக மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் குற்றம்சாட்டி மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளனா்.