இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

உலக பட்டினி தினம்: தவெக சாா்பில் அன்னதானம்

திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கிய வீட்டு வசதித்துறை அமைச்சா் பி.ராஜ்குமாா்.

News image
Updated On :29 மே 2026, 2:48 am IST

உலக பட்டினித் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கடலூரில் ஏழை எளிய மக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினித் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்ட த.வெ.க சாா்பில் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான பி. ராஜ்குமாா் தலைமை வகித்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினாா்.

இதேபோன்று, கடலூா் மாவட்டம் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே தவெக சாா்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தலைமை கழக நிலைச் செயலா் ராஜசேகா் தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட பொருளாளா் கண்ணதாசன், ஒன்றிய செயலா் நீலகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.