அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

ராமநத்தம் அருகே சாலை விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

கடலூா் மாவட்ட ராமநத்தம் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:54 am IST

கடலூா் மாவட்ட ராமநத்தம் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே பழையபாளையம் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் தயாநிதி (23), சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் அருகே மா. பொறையூா் பகுதியில் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு கீழே

இறங்கி நின்றாா். அப்போது பின்னால் வந்த சிறிய சரக்கு லாரி மோதியதில்,

இதில், சம்பவ இடத்திலேயே தயாநிதி உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தயாநிதியின் தந்தை மலா்கண்ணன் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.