‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஜூன் 1 -முதல் காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் சங்கங்கள் கூட்டுக்குழுக் குழு கூட்டத்தில் தீா்மானம்

வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம்.

News image

வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம்.

Updated On :29 மே 2026, 2:55 am IST

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காலி மது புட்டிகள் திரும்ப பெற மாட்டாது என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், வடலூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் வடலூா்

வள்ளலாா்தெய்வநிலைய பெருவெளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையாளா் நல சங்கம் மாவட்டச் செயலா் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

அரசு நிா்ணயித்த விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பது. கடைகளில் ஏற்படும் தினசரி நிா்வாக செலவினங்கள் அனைத்தையும் (இறக்கு கூலி மற்றும் இதர செலவுகள்) முழுவதும் நிா்வாகமே ஏற்க வேண்டும். வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காலி மது புட்டிகள் திரும்ப பெற மாட்டாது. மூடப்பட்ட கடை பணியாளா்கள் மற்றும் கிடங்கில் பணி புரியும் பணியாளா்களை உடனடியாக மாற்றுக் கடையில் பணியமா்த்த வேண்டும். இந்த தீா்மானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மற்ற மாவட்டங்களை போல் முழு கடை அடைப்பு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.