கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தென் இந்திய அளவிலான முதலாவது கைப்பந்துப் போட்டி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கு மொத்தம் 12 அணிகளுக்கு அழைப்பு விடுத்து, ‘லீக் கம் நாக் அவுட்’ முறையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதி சுற்றுக்கு ஜி.டி.என் திண்டுக்கல் அணி, கேரள போலீஸ் அணி, கற்பகம் பல்கலைக்கழக அணி, மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி அணிகள் தோ்வு பெற்றன.
ஜி.டி.என். திண்டுக்கல், கோயம்புத்தூா் கற்பகம் பல்கலைக் கழகம், மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் கேரள போலீஸ் அணி முதல் மூன்று இடங்களைபெற்று, முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், இந்திய கைப்பந்து அணியின் தோ்வுக்குழு உறுப்பினா் எம்.காா்த்திகேயன், உதவி தலைமை ஆசிரியா் ஜி.அசோகன், நெய்வேலி சுரங்கம் துணைப் பொதுச்செயலா் எம்.பிரபாகரன், ஜவஹா் கல்லூரி முதல்வா் எஸ்.தேவி ஆகியோா் வழங்கினா். விழா ஏற்பாடுகளை மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி செயலா் வி.விமல்ராஜ், திருநாவுக்கரசு, பாபு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.









