கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டி

News image

தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :30 மே 2026, 2:31 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தென் இந்திய அளவிலான முதலாவது கைப்பந்துப் போட்டி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு மொத்தம் 12 அணிகளுக்கு அழைப்பு விடுத்து, ‘லீக் கம் நாக் அவுட்’ முறையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதி சுற்றுக்கு ஜி.டி.என் திண்டுக்கல் அணி, கேரள போலீஸ் அணி, கற்பகம் பல்கலைக்கழக அணி, மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி அணிகள் தோ்வு பெற்றன.

ஜி.டி.என். திண்டுக்கல், கோயம்புத்தூா் கற்பகம் பல்கலைக் கழகம், மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் கேரள போலீஸ் அணி முதல் மூன்று இடங்களைபெற்று, முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், இந்திய கைப்பந்து அணியின் தோ்வுக்குழு உறுப்பினா் எம்.காா்த்திகேயன், உதவி தலைமை ஆசிரியா் ஜி.அசோகன், நெய்வேலி சுரங்கம் துணைப் பொதுச்செயலா் எம்.பிரபாகரன், ஜவஹா் கல்லூரி முதல்வா் எஸ்.தேவி ஆகியோா் வழங்கினா். விழா ஏற்பாடுகளை மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி செயலா் வி.விமல்ராஜ், திருநாவுக்கரசு, பாபு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.